ஆற்காடுக் கோட்டை
வகை
வரலாற்று சிறப்புமிக்கது
ஆற்காட்டில் நவாப்சாதத்துல்லாகான் கட்டிய அரண்மனையின் இடிபாட்டு பகுதிகளும், தூர்ந்துவிட்ட அகழியும், மசூதிகளும் பிற கட்டிட பகுதிகளும் மிகவும் பழமையானவைகளாகும். இவைகள் கி.பி.18-ஆம் நூற்றாண்டில் செங்கற்களாலும், சுதையாலும் கட்டப்பட்டவையாகும். அவைகள் தற்பொழுது பெரும்பகுதி அழிந்துவிட்டன. கோட்டைப்பகுதியில் உள்ள குளம், தொழுகை செய்த மசூதி, அதன் அருகில் உள்ள கிணறு போன்றவையே எஞ்சியுள்ளன. இக்கோட்டைப்பகுதி சுமாா் 10 ஏக்கர் நிலப்பரப்பில் விரிந்துள்ளது. பாலாற்றிலிருந்து மசூதிக்கு அருகில் உள்ள குளத்திற்கு தண்ணீர் வந்து மீண்டும் பாலாற்றிற்கே செல்லும் வண்ணம் தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளது போன்றத்தக்க ஓர் அமைப்பாகும். இக்கோட்டைக்கு ஆலம்பனா கோட்டை என்று பெயர்.