மூடு

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் வரலாற்றுச் சின்னங்கள்

வ. எண் வரலாற்றுச் சின்னத்தின் பெயர் அமைவிடம்
1 ஏழு கன்னியர் சிலைகள் பெருங்காஞ்சி, வாலாஜா
2 வாலீஸ்வரர் கோயில் தக்கோலம், அரக்கோணம்
3 கஞ்சா சாகிப் கல்லறை சோளிங்கர்

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் வேலூா் மாவட்டத்தில் பாதுகாக்கப்படும் தொல்லியல் சின்னங்கள்

ஏழு கன்னியர் சிலைகள் – பெருங்காஞ்சி

ஏழு கன்னியர் சிலைகள் - பெருங்காஞ்சி

ஏழு கன்னியர் சிலைகள் – பெருங்காஞ்சி

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வரும் தொல்லியல் சின்னங்களில் பெருஞ்காஞ்சி ஏழு கன்னியர் சிலைகளும் ஒன்றாகும். இந்நினைவுச் சின்னம் வாலாசாவில் இருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் உள்ள பெருங்காஞ்சி என்ற கிராமத்தின் கிழக்கில் அமைந்துள்ளது. பல்லவர் காலத்தில் செதுக்கப்பட்ட இச்சிலைகள் கி.பி. 8-ஆம் நூற்றாண்டை சார்ந்தவைகளாகும். பல்லவர்களின் கலைப்பாணிக்கு இச்சிலைகள் ஓர் நல்ல எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன.

ஏழு கன்னியர் என்று அழைக்கப்படும்

    1. பிராமி
    2. மகேஸ்வரி
    3. கௌமாரி
    4. வைஷ்ணவி
    5. வாராகி
    6. இந்திராணி
    7. சாமுண்டி

இவர்களுடன் விநாயகர் சிற்பமும், வீரபத்திரர் சிற்பமும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புகைப்படத் தொகுப்பினைக் காண இங்கே சொடுக்கவும்

வாலீஸ்வரர் கோயில்

ஏழு கன்னியர் சிலைகள் - பெருங்காஞ்சி

வாலீஸ்வரர் கோயில்

ராட்டிரக்கூட மன்னன் ரூன்றாம் கிருஷ்ணன் கன்னர தேவன் தக்கோலப் போரில் இராசாதித்தனைக் கொன்ற வரலாறு பலருமறிந்ததாகும்/ முதலாம் இராஜாதிராஜன் காலத்தில் கிபி 1018 – 1054 இவ்கீர் இரட்டபாடி கொண்ட சோழபுரம் என்றும் முதல் குலோத்துங்கன் காலத்தில் பல்லவபுரம் எனவும் குலோத்துங்க சோழபுரம் எனவும் விஜயநகர அரசர் காலத்தில் படிமுடி கொண்ட சோழபுரம்

எனவும் வழங்கப்பட்டது. தக்கோலம் ஊருக்குக் கிழக்கில் திருவாலீஸ்வரம் என்ற சிதைந்த கோயில் உள்ளது. அளூதிஷ்டானத்திலிருந்து கொடுங்கை வரை கருங்கல்லாலும் செங்கல்லாலும் கட்டப்பட்டது. விமானம் வட்ட வடிவில் அமைந்துள்ளது.. இதன் கோஷ்டங்களில் சிற்பங்கள் இல்லை.

அர்த்த மண்டபத்திற்கு வெளியில் 4 கருங்கல் தூண்கள் கொண்ட திறந்தவெளி மண்டபம் உள்ளது. முதலாம் இராஜேந்திரனுடைய 8ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டே வாலீஸ்வரர் கோயிலின் தொன்மையான கல்வெட்டு என்பதால் கிபி 1020க்கு முன் இக்கோயில் கட்டப்பட்டது உறுதியாகிறது/ முதல் இராசேந்திரனின் தாய் திரிபுவன மாதேவியின் நலம் பொருட்டு நாற்பத்தெண்ணாயிர பிடாரர் கோயிலில் இறைவனுக்கு விஷாகா பாலபிஷேகத்திற்காக 32 பசுக்களை வழங்கியுள்ளார். இறைவன் மகாதேவனாய மும்மலை ஈஸ்வரன் எனவும் ஊர் திருப்பாமுதல் எனவும் வழங்கப்பட்டுள்ளது.

கருவறை மேற்குச் சுவரில் விக்கிரசோழனின் கல்வெட்டு (கிபி 1123) உள்ளது. கருவறை வடக்கில் உள்ள கல்வெட்டு முன்றாம் இராசேளூநதிரன் காலத்தது ஆகும்/ உமேசுர தேவன் விநாயகர் போன்றோருக்கு செப்புப் படிமங்கள் எடுத்து வழிபாட்டுக்கு மன்னன் கொடை வழங்கிய விவரம் கல்வெட்டில் உள்ளது. ஊர் குலோத்துங்க சோழபுரம் என்றும் இக்கல்வெட்டில் கூறப்படுகிறது.

புகைப்படத் தொகுப்பினைக் காண இங்கே சொடுக்கவும்

கஞ்சா சாகிப் கல்லறை – சோளிங்கர்

கஞ்சா சாகிப் கல்லறை - சோளிங்கர்

கஞ்சா சாகிப் கல்லறை – சோளிங்கர்

வாலாசா வட்டம், சோளிங்கர் பேருந்து நிலையத்திற்கு எதிரே முக்கிய சாலையின் ஓரத்தில் இச்சின்னம் அமைந்துள்ளது. 15 அடி அகலமும், 35 அடி நீளமும் கொண்ட இக்கல்லறை கஞ்சா சாகிப் கல்லறை என அழைக்கப்படுகின்றது. இச்சின்னம் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் சின்னங்களில் ஒன்றாகும். இக்கட்டிடம் சுதையாலும், செங்கற்கலாலும் கட்டப்பட்டதாகும். கி.பி.1781-ஆம் ஆண்டு ஆங்கில படைகளுக்கும் திப்புசுல்தான் படைகளுக்கும் இடையில் சோளிங்கரில் நடந்த போரின் பொழுது திப்புசுல்தான் படையின் சார்பில் போரிட்டு மரணமடைந்த படைவீரர்களின் உடல்கள் மொத்தமாக இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஒரு பெரிய குழிவெட்டி அதில் மொத்தமாக வீர மரணமடைந்த வீரர்களின் உடல்கள் மண்ணில் மூடப்பட்டது என நம்பப்படுகின்றது. இதனை அறிய இதன் நுழைவாயின் மேல் உள்ள ஆங்கிலக் கல்வெட்டு ஒன்று தெளிவாக்குகின்றது.

புகைப்படத் தொகுப்பினைக் காண இங்கே சொடுக்கவும்