மூடு

மாவட்டம் பற்றி

தோற்றம்

இராணிப்பேட்டை தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் இராணிப்பேட்டை ஆகும். இராணிப்பேட்டை மாவட்டம், 2019 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 15 ஆம் தேதி வேலூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது.தமிழ்நாட்டின் 36 ஆவது மாவட்டமாக, இம்மாவட்டத்தை 28 நவம்பர் 2019 அன்று தமிழக முதல்வர் முறைப்படி இராணிப்பேட்டையில் துவக்கி வைத்தார்.

நிர்வாக அலகுகள்

இராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் ஆகிய இரு கோட்டங்களையும், ஆற்காடு, வாலாஜாபேட்டை, கலவை, சோளிங்கர், அரக்கோணம், மற்றும் நெமிலி ஆகிய ஆறு வட்டங்களையும், 330 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கியுள்ளது., 288 ஊராட்சிகளையும் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் அரக்கோணம், இராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடு, மேல்விஷாரம் ஆகிய ஐந்து நகராட்சிகளும், சோளிங்கர், காவேரிபாக்கம், திமிரி, கலவை, நெமிலி, தக்கோலம், பனப்பாக்கம், விளாப்பாக்கம், அம்மூர் ஆகிய ஒன்பது பேரூராட்சிகளும் உள்ளன.

அமைவிடம்

தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் ஆந்திர பிரதேசம், கர்நாடக எல்லையோர நகரங்களுடன் சாலை வழி இணைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் தடம் 4 ( ராணிப்பேட்டை – சென்னை ), 46 ( பெங்களூரு – சென்னை ) மற்றும் 234 ( மங்களூரு – விழுப்புரம் ) ஆகியவை வேலூர் வழியே செல்கின்றன.

கனிமங்கள் மற்றும் சுரங்கம்

கனிம வளம் நிறைந்த மாவட்டம், செம்மண், செங்கல் களிமண் போன்ற கனிமங்களும் இந்த மாவட்டத்தில் காணப்படுகின்றன.

வழிபாட்டுத்தலங்கள்

லெட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவில் – சோளிங்கர் ராணிப்பேட்டை இருந்து சுமார் 30 கி.மீ. தூரத்தில் உள்ளது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 65 வது திவ்ய தேசம் இத்தலத்தில் நரசிம்மரும் ஆஞ்சநேயரும் யோகசனத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு. சிம்ஹ கோஷ்டாக்ருதி விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். மலைக்கோயிலின் நீளம் 200 அடி அகலம் 150 அடி ஏறத்தாழ் 1 ஏக்கர் பரப்பு 750 அடி உயரத்தில் சுமார் 1305 படிக்கட்டுகளோடு மலைமீது அமைந்துள்ளது. இங்கு பெரிய மலை சிறிய மலை என இரண்டு மலைகள் உள்ளன.

பாலமுருகன் கோயில்
ரத்னகிரி பாலமுருகன் கோயில் வேலூரிலிருந்து சுமார் 15 கி.மீ தூரத்தில் திருமணிக்குன்றம் அருகே உள்ள ஒரு பழமையான முருகன் கோயில். இது 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோயில் மலை உச்சியில் அமைந்துள்ளது.

தொழில்கள்

இராணிப்பேட்டை தென்னிந்தியாவின் ஒரு தொழில்துறை மையமாகும். தோல் மற்றும் தோல் பொருட்கள் காலணிகள், ஆடைகள் போன்றவற்றை ஏற்றுமதி செய்யப்படுகிறது பல பெரிய மற்றும் நடுத்தர தோல் தொழில்கள் உள்ளன. இராணிப்பேட்டையில் மற்ற சிறிய அளவிலான தொழில்கள் உள்ளன, அவை பெரும்பாலும் ரசாயன, தோல் மற்றும் கருவி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. இந்தத் தொழில்கள் நகரத்தின் முக்கிய உயிர்நாடியாகும்.