மூடு

வட்டார போக்குவரத்து அலுவலகங்கள்

இராணிப்பேட்டை மாவட்ட வட்டார போக்குவரத்து  அலுவலகங்கள்

 

கீழ்க்காணும் பணிகள் இவ்வலுவலகத்தில் மேற்கொள்ளப்படுகின்றன:

  • பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் மற்றும் நடத்துநர் உரிமம் போன்றவை வழங்குதல்.
  • இயங்கு ஊர்திகளின், பதிவு மற்றும் புதுப்பித்தல் சான்று வழங்குதல்.
  • தகுதிச் சான்று வழங்கல் மற்றும் தகுதிச் சான்று புதுப்பித்தல் போன்றவை.
  • லாரிகளுக்கு தேசிய அனுமதி,சரக்கு வாகன அனுமதி, ஒப்பந்த ஊர்தி அனுமதி (சுற்றுலா ஊர்தி , வாடகை ஊர்தி, ஆட்டோ ரிக்சா, ஷேர் ஆட்டோ போன்றவை), கல்வி நிறுவன பேருந்துகள், தனியார் பணி வாகனங்கள், போன்றவைகளுக்கு அனுமதி வழங்குதல்.
  • சாலை பாதுகாப்பு மற்றும் இதர குற்றங்கள் தொடர்பாக அனைத்து வகை போக்குவரத்து வாகனங்களையும் ஆய்வு செய்தல் மற்றும் உரிய அபராதம் வசூலித்தல்.
  • அபாயகரமாக விபத்து ஏற்படுத்திய வாகன ஓட்டுநர்கள்,அதிவேகமாக வாகனம் ஓட்டபவர்கள், குடித்துவிட்டு வாகனம் ஒட்டுபவர்கள், செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஒட்டுபவர்கள், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஒட்டுபவர்கள் மற்றும் போக்குகூரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டுநர்களின் மீது நடவடிக்கை எடுத்தல்.
  • ஒவ்வொரு வருடமும், பொதுமக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்த, ஜனவரி மாதத்தில் சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடுதல்.
  • மாசு பரிசோதனை மையம், அவசர விபத்து சிகிச்சை மையம் ஆகியவற்றை ஆய்வு செய்தல் போன்றவை.

சேவைகளை பெறுவதற்கான நடைமுறைகள் :

  • ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் நடத்துநர் உரிமங்கள் – http://parivahan.gov.in/parivahan/
  • புதிய வாகனப்பதிவு, நடப்புப்பதிவு எண் மற்றும் அலுவலக எல்லை – http://tnsta.gov.in/transport/
  • வாகனங்களுக்கான வரி விகிதம், அலுவலக படிவங்கள் தரவிறக்கம் – http://tn.gov.in/sta/

தொடர்பு விபரம்:

பதவி தொடர்பு எண் மின்னஞ்சல் முகவரி முகவரி
வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் இராணிப்பேட்டை 04172-273087 Rtotn73[at]nic[dot]in வட்டாரப்போக்குவரத்து அலுவலகம், தேசிய நேடுஞ்சாலை-4, பாரதிநகர், இராணிப்பேட்டை
மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை 1, பகுதி அலுவலகம், அரக்கோணம். 04177-236700 Rtotn73z[at]nic[dot]in மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை-1,பகுதி அலுவலகம, அரக்கோணம், எண்.45/48ஏ, வள்ளலார் தெரு, ஜோதி நகர், அரக்கோணம்-631001.

 

சாலை பாதுகாப்பு :

  1. பழகுநர் உரிமம் பெறுவதற்காக வருகின்ற அனைத்து மனுதாரர்களுக்கும் சாலையில் பயன்படுத்தப்படும் சிக்னல்கள் மற்றும் அதன் செயற்பாடுகள் குறித்து விபரமாக பயிற்சிகள் நடத்தப்படுகிறது. பிறகு கணினி மூலம் தேர்வு நடத்தப்படுகிறது, அதில் தேர்ச்சியடைந்த பின்னரே பழகுநர் உரிமம் வழங்கப்படுகிறது.
  2. சாலையில் பயன்படுத்தப்படும் அனைத்து வகையான சிக்னல்கள; சம்மந்தமாக தேர்வு நடத்தி அதில் தேர்ச்சி பெற்ற பின்னரே ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்படுகின்றன.
  3. ஓவ்வொரு ஆண்டும் சனவரி 1ந் தேதி முதல் 7 வரை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா போக்குவரத்து துறையினரால் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஒவ்வொரு நாளும் கீழ்க்கண்டவாறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
  4. ஓட்டுநர்களுக்கு இலவச கண் பரிசோதனை தேர்ந்த மருத்துவர்கள் மூலம் நடத்தப்படுகிறது.
  5. சாலை பாதுகாப்பு விளக்க மற்றும் விழிப்புணர்வு பேரணி துண்டு பிரசுரங்கள் விநியோகம் – அதிக வேகம், அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
  6. மாசுகட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து அதிக ஒளி வீசும் முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்ட வாகனங்களை தணிக்கை செய்தல்.
  7. பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
  8. தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வி நிலையங்களில் போக்குவரத்து விதிகள் குறித்து அறிவிப்பு பலகைகள் பொறுத்தப்பட்டுள்ளன.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005

போக்குவரத்து துறையில் தகவல் வழங்கும அலுவலர்

அலுவலகத்தின் பெயர் தகவல் வழங்கும் அலுவலர் பெயர் மேல் முறையிட்டு அலுவலர்
வட்டாரபோக்குவரத்து அலுவலகம், இராணிப்பேட்டை நேர்முக உதவியாளர் வட்டார போக்குவரத்து அலுவலர்
மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம், அரக்கோணம். கண்காணிப்பாளர் மோட்டார் வாகன ஆய்வாளர், நிலை 1