ஏழு கன்னியர் சிலைகள் – பெருங்காஞ்சி
வகை
வரலாற்று சிறப்புமிக்கது
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வரும் தொல்லியல் சின்னங்களில் பெருஞ்காஞ்சி ஏழு கன்னியர் சிலைகளும் ஒன்றாகும். இந்நினைவுச் சின்னம் வாலாசாவில் இருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் உள்ள பெருங்காஞ்சி என்ற கிராமத்தின் கிழக்கில் அமைந்துள்ளது. பல்லவர் காலத்தில் செதுக்கப்பட்ட இச்சிலைகள் கி.பி. 8-ஆம் நூற்றாண்டை சார்ந்தவைகளாகும். பல்லவர்களின் கலைப்பாணிக்கு இச்சிலைகள் ஓர் நல்ல எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன.
ஏழு கன்னியர் என்று அழைக்கப்படும்
-
- பிராமி
- மகேஸ்வரி
- கௌமாரி
- வைஷ்ணவி
- வாராகி
- இந்திராணி
- சாமுண்டி