தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் வரலாற்றுச் சின்னங்கள்
வ. எண் | வரலாற்றுச் சின்னத்தின் பெயர் | அமைவிடம் |
---|---|---|
1 | ஏழு கன்னியர் சிலைகள் | பெருங்காஞ்சி, வாலாஜா |
2 | வாலீஸ்வரர் கோயில் | தக்கோலம், அரக்கோணம் |
3 | கஞ்சா சாகிப் கல்லறை | சோளிங்கர் |
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் வேலூா் மாவட்டத்தில் பாதுகாக்கப்படும் தொல்லியல் சின்னங்கள்
ஏழு கன்னியர் சிலைகள் – பெருங்காஞ்சி
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வரும் தொல்லியல் சின்னங்களில் பெருஞ்காஞ்சி ஏழு கன்னியர் சிலைகளும் ஒன்றாகும். இந்நினைவுச் சின்னம் வாலாசாவில் இருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் உள்ள பெருங்காஞ்சி என்ற கிராமத்தின் கிழக்கில் அமைந்துள்ளது. பல்லவர் காலத்தில் செதுக்கப்பட்ட இச்சிலைகள் கி.பி. 8-ஆம் நூற்றாண்டை சார்ந்தவைகளாகும். பல்லவர்களின் கலைப்பாணிக்கு இச்சிலைகள் ஓர் நல்ல எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன.
ஏழு கன்னியர் என்று அழைக்கப்படும்
-
- பிராமி
- மகேஸ்வரி
- கௌமாரி
- வைஷ்ணவி
- வாராகி
- இந்திராணி
- சாமுண்டி
இவர்களுடன் விநாயகர் சிற்பமும், வீரபத்திரர் சிற்பமும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கஞ்சா சாகிப் கல்லறை – சோளிங்கர்
வாலாசா வட்டம், சோளிங்கர் பேருந்து நிலையத்திற்கு எதிரே முக்கிய சாலையின் ஓரத்தில் இச்சின்னம் அமைந்துள்ளது. 15 அடி அகலமும், 35 அடி நீளமும் கொண்ட இக்கல்லறை கஞ்சா சாகிப் கல்லறை என அழைக்கப்படுகின்றது. இச்சின்னம் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் சின்னங்களில் ஒன்றாகும். இக்கட்டிடம் சுதையாலும், செங்கற்கலாலும் கட்டப்பட்டதாகும். கி.பி.1781-ஆம் ஆண்டு ஆங்கில படைகளுக்கும் திப்புசுல்தான் படைகளுக்கும் இடையில் சோளிங்கரில் நடந்த போரின் பொழுது திப்புசுல்தான் படையின் சார்பில் போரிட்டு மரணமடைந்த படைவீரர்களின் உடல்கள் மொத்தமாக இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஒரு பெரிய குழிவெட்டி அதில் மொத்தமாக வீர மரணமடைந்த வீரர்களின் உடல்கள் மண்ணில் மூடப்பட்டது என நம்பப்படுகின்றது. இதனை அறிய இதன் நுழைவாயின் மேல் உள்ள ஆங்கிலக் கல்வெட்டு ஒன்று தெளிவாக்குகின்றது.